மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My Photo
Coimbatore, Tamil Nadu, India
எழுத்து என் தொழில் அல்ல! பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், பல குட்டிக்கதைகளையும் எழுதியுள்ளேன். 1,800ற்கும் மேற்பட்ட பதிவுகளைப் பல தலைப்புக்களில் எழுதியிருக்கிறேன். பத்திரிக்கைகளால் 30,000 வாசகர்களும், வலைப்பதிவால் 3,840 பின் தொடர்பாளர்களும் கிடைத்திருக்கிறார்கள். ஏழு புத்தகங்கள் வெளி வந்துள்ளன. எல்லாம் என்னுடைய சாதனை அல்ல. பழநிஅப்பனின் அருள். ஜோதிடமும் என் தொழில் அல்ல! நான் படித்ததை, கற்றுணர்ந்ததைப் பலரும் கற்றுக்கொள்ள எழுதிவருகிறேன். 653 அடிப்படைப் பாடங்களை எழுதியுள்ளேன். பதிவில் திருட்டுப் போவதால், அதைத் தவிர்க்க, மேல்நிலைப் பாடங்களைத் தனி இணைய தளம் மூலம் எழுதிக்கொண்டிருக்கிறேன் classroom2013. அது உறுப்பினர்களுக்கு மட்டுமே. அவற்றில் எழுதப்படுபவை பின்னால் புத்தகங்களாக வரவுள்ளன. அப்போது அவற்றை அனைவரும் படிக்கலாம்! எனது தொழில் செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில். தீவிரவாசகன், அது ஒன்றுதான் என்னுடைய தகுதி. கடந்த எட்டு ஆண்டுகளாக எழுதுகிறேன். அது என்னுடைய போதாத நேரம்!!!. நல்ல நேரம் துவங்கும்போது எழுதுவதை நான் நிறுத்திவிடுவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்!

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

19.6.13

Astrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்குத் தெரியாதா?

 

Astrology: யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரனுக்குத் தெரியாதா?

எட்டாம் எண் பலரையும் பயம் கொள்ள வைக்கும் எண்ணாகும். ஆனால் எட்டில் ஏராளமான நன்மைகளும் உண்டு.

இன்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் Facebookகை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் முதன் எழுத்து எண் கணிதத்தின்படி எட்டிற்கு
உரிய எண்ணாகும். Facebook என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களும் எட்டு ஆகும். அதன், அதாவது அந்தச் சொல்லின் கூட்டு எண்ணும் எட்டு
ஆகும்

Facebook = F (8) + A (1) + C (3) + E (5) + B (2) + O (7) + O (7) + K (2) = 35
இந்த 35ன் தனி எண் = 35 = 3 +5 + 8

எட்டு எண்பது வலிமை மிக்க எண்ணாகும் (Powerful Number)

Bombay = B (2) + O (7) + M (4) + B (2) + A (1) + Y (1) = 17 = 8

1995ஆம் ஆண்டு அதன் பெயர் மாற்றப்பெற்ற பிறகு அதன் அதிஷ்டங்களும் எட்டிலிருந்து வேறு ஒரு எண்ணுக்குப் போனது!

Mumbai = M (4) + U (6^) + M (4) + B (2) +A (1) + I (1) = 18

எழுதும்போது எல்லா எண்களும் மேலே துவங்கி கீழே முடியும். எட்டு மட்டும் மேலே துவங்கி மீண்டும் மேலேயே முடியும். நாம் பயணத்தை எங்கே
துவங்கினோமோ அங்கேயே அந்தப் பயணம் முடியும் என்பதை அது குறிக்கும்!

முகம் பார்க்கும் கண்ணாடியில் மற்ற எண்களெல்லாம் மாற்றத்துடன் தெரியும். எட்டு மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தெரியும்!

எட்டைக் குறுக்கு வசத்தில் இரண்டாக உடைத்தால் இரண்டு ஜீரோக்கள் (சைபர்கள்) கிடைக்கும். வாழ்க்கை இறுதியில் ஜீரோ என்பதை அது
உணர்த்தும். எண் எட்டு சனியினுடைய எண். அவன் ஆயுள்காரகன் அதை மனதில் வையுங்கள்.

எட்டாம் எண் பல தத்துவஞானிகள், சிந்தனையாளர்கள், மகான்களுடன் தொடர்புள்ள எண்ணாகும்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாவர். 4 +4 = 8 அவருடைய பெயருக்கான எழுத்துக்களின் மதிப்பும்
எட்டுதான். Barack Obama = 212132 72141 = 26 = 8

நட்சத்திர வரிசையில் பார்த்தீர்கள் என்றால், சனி பகவானுடைய நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவைகளின் வரிசை எண் 8, 17, 26 ஆகும் அவைகளின் தனி எண்ணும் எட்டுதான்

மனித உடம்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 206 = 8

மனித மூளையின் ஆற்றலுக்கு வேலை கொடுக்கும் செஸ் ஆட்டத்தில் உள்ள காய்களின் எண்ணிக்கை எட்டு. பெரிய காய்கள் +  சிப்பாய்கள் எட்டு
ஆட்டத்தின் தளத்திலும் எட்டு கட்டங்கள், எட்டு வரிசைகள்

ஒரு காகிதத்தை எட்டு தடவைக்கு மேல் உங்களால் மடிக்க முடியாது. வேண்டுமென்றால் முயன்று பாருங்கள்

உலக அளவில் ஆங்கில மொழி ஏன் இத்தனை பிரபலம்?

அந்த மொழியில் உள்ள எழுத்துக்கள் 26 = 8

ஆங்கில மொழியில் உள்ள  F & P ஆகிய இரண்டு எழுத்துக்களுக்கும் உரிய எண் 8. அந்த எழுத்துக்களுடன் துவங்கும் பல சொற்கள் நம் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டதாக இருக்கும். நம்மைக் கலக்குவதாக இருக்கும்!

Fail, Fate, False, Fire, Fatal, Fear, Fever, Fight, Foreign, Frustration, Fracture, Future (worry of future), Freedom, Fall,Fast,Famine,Fibroid, etc.

Pass, Pacemaker(for heart),  Poverty,Pathetic, Pain,Panic, Proud, Perversion, Philosophy, Police, Poor, Prison,Poison,Phishing, Prohibition,Patient (in hospital) and Punishment etc.


இந்திய சுதந்திரம் அடைந்த தினம்

15-8-1947 = 35 = 8
அன்றைய நட்சத்திரம் பூசம் = வரிசையில் எட்டாவது நட்சத்திரம் = அத்துடன் அது சனி பகவானின் நட்சத்திரம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது அஷ்டமி திதியன்று. அது திதிகளின் வரிசையில் எட்டாவது திதியாகும். அத்துடன் அவர் தனது பேற்றோர்களுக்கு
எட்டாவது குழந்தையாவார்.

கவியரசர் கண்ணதாசனும் தன்னுடைய பேற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாவார்

இந்த ஆக்கம், இணையத்தில் முன்பு படித்த கட்டுரை ஒன்றுடன் என் சொந்த சரக்கையும் கலந்து கொடுத்துள்ளதாகும்
----------------------------------------
சரி, தலைப்பிற்கு வருகிறேன்

யாரை எங்கே வைப்பது என்று கர்மகாரகனுக்குத் தெரியாதா?

தெரியும். எண் கணிதத்தில் அது விவரமாகத் தெரியாது. ஆனால் ஜோதிடத்தில் அது பளிச்’சென்று தெரியும்

அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
”வாத்தி (யார்) பாடத்திற்கும் முகப்பில் உள்ள படத்திற்கு என்ன சம்பந்தம்?”

”கண்ணா, அவர் திருநீறு பூசியிருக்கும் அழகைப் பார்த்தாயா? அதை உனக்குச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் அந்தப் படம். திருநீற்றை அப்படித்தான் பூசிக்கொள்ள வேண்டும்!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

18.6.13

Astrology: எத்தனை வில்லன்களப்பா சாமி?

 

Astrology: எத்தனை வில்லன்களப்பா சாமி?

கல்கி அவர்கள் எழுதிய அற்புதமான பொன்னியின் செல்வன் தொடர்கதையில், அவருடைய மொழியாற்றல், கதை சொல்லும் உத்தி, கதாபாத்திரங்களைச் சுட்டிக் காட்டும் நேர்த்தி என்று படிப்பவர்களை வியக்கவைக்கும் பல விஷயங்கள் உள்ளன.

கதையில் வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், கரிகாலன், சேந்தன்அமுதன், என்று பல நாயகர்கள். குந்தவை, வானதி, பூங்குழலி, நந்தினி என்று பல நாயகிகள். பழு வேட்டரையர்கள், ரவிதாசன் போன்ற வில்லர்கள். அத்தனை பேர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கதையை அனாசயமாகக் கொண்டு செல்வார்.

அதுபோல ஜோதிடத்தில் பல நாயகர்களும் உண்டு. வில்லர்களும் உண்டு.

சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற நாயகர்கள் உள்ளார்கள். சனி, ராகு,கேது, மாந்தி, குளிகன் போன்ற வில்லர்களும் உள்ளார்கள்.

வில்லர்களில் முதல் மூவரை அனைவருக்கும் தெரியும். ஆனால் திரை மறைவிற்குப் பின் நின்று போட்டுத் தள்ளும் வில்லன்களான மாந்தி, மற்றும் குளிகனைப் பற்றிப் பலருக்கும் தெரியாது.

இருவருமே கொடியவர்கள்.

சிலர், மாந்தியும் குளிகனும் வெவ்வேறானவர்கள் என்பது தெரியாமல் இருவரும் ஒருவரே என்பார்கள்.

அது உண்மையல்ல!

இருவரும் தனித்தனியானவர்கள். ஜாதகனைப் போட்டுத்தள்ளுவதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை!

அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

8.6.2013 அன்றைய கிரக நிலைப் படம் கிழே உள்ளது.


மாந்தியும் , குளிகனும் வெவ்வேறு பாகைகளில் இருப்பதைப் பாருங்கள். ஜகன்னாத ஹோரா மென்பொருளைத் தட்டினால், எந்தத் தேதிக்கு வேண்டுமென்றாலும், அவர்களின் நிலைப்பாடு தெரியவரும் (ஆன்லைனில் அது இலவச மென்பொருள்)

பண்டைய ஜோதிட நூல்கள் குளிகனை சனியினுடைய புத்திரன் என்றும், மாந்தியை எமனுடைய புத்திரன் என்று கூறுகின்றன. இருவரில் மாந்தி மிகவும் மோசமானவன்.பயம் கொள்ளவைப்பவன். இருக்கும் இடத்தின் பலன்களை ஜாதகனுக்குக் கிடைக்கவிடாமல் தட்டிப் பறிப்பவன். அழித்துவிடக்கூடியவன்

ஆகவே மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தின் பாவபலன் ஜாதகனுக்குக் கிடைக்காமல் போய்விடும். அத்துடன் மாந்தி அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதியின் திசைப் பலனும் ஜாதகனுக்குக் கேடுகளையே செய்யும்.

முற்காலத்தில் அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமிழர்கள் பலரின் ஜாதகத்தில் மாந்தியைப் பற்றியை ஜாதக அமைப்பே குறிப்பிடப் பெற்றிருக்காது. காரணம் தமிழ் நாட்டில் வாழ்ந்த பல ஜோதிடர்கள் அக்காலத்தில், மாந்தியையும், அஹ்டகவர்க்கத்தையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாததே காரணம்.

உங்கள் ஜாதகத்தை எடுத்துப்பாருங்கள். அதில் மாந்தி, குளிகன், அஷ்டகவர்க்கம் ஆகிய மூன்றும் இல்லை என்றால் புதிதாக ஒன்றைக் கணித்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்!

சரி, மாந்தி & குளிகனால் ஏற்படும் கேடுகள் என்னென்ன? அது பெரிய பாடம். பின் ஒரு நாள் அதை எழுதுகிறேன்.தற்சமயம் நேரம் இல்லை. இங்கே அல்ல! இங்கே எழுதினால் கஷ்டப்பட்டு என் மொழியில் என் நடையில் உதாரணங்களுடன் எழுதுவதை லவட்டிக்கொண்டு போய் தங்கள் வலைத்தளங்களில் தாங்கள் எழுதியதைப்போல போட்டுக்கொண்டு விடுகிறார்கள். அநியாயத்திற்குத் திருட்டுப்போகின்றன! ஜோதிடம் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதை எழுத ஆசைப் படுகிறவர்கள், தங்கள் நடையில் எழுதட்டும். கட் & பேஸ்ட் கலாச்சாரம் எதற்கு?

ஆகவே அதை மேல்நிலை வகுப்பில் எழுதுவதாக உள்ளேன். பின்னால் அது புத்தக வடிவில் வரும்போது அனைவரும் படித்துப் பயனுறலாம். மகிழலாம். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

17.6.13

Astrology: பணம் எதை எதைக் கொடுக்கும்?

 

Astrology: பணம் எதை எதைக் கொடுக்கும்?

’பணம் எதை எதைக் கொடுக்கும்?’ என்று கேட்டால் சாமானியனின் பதில், அதாவது சராசரி மனிதனின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

”அம்மாவைத்தவிர, பெற்ற தாயைத் தவிர, விலைமதிப்பில்லாத தாயன்பைத் தவிர எல்லாவற்றையும் கொடுக்கும்” என்பான்

உண்மையான பதில் அதுவல்ல!

’பணம் எதை எதைக் கொடுக்காது?’ என்று கேட்டால் பலவிதமான பதில்கள் கிடைக்கும்.

பணம் நல்ல, அன்பான மனைவியைக் கொடுக்குமா? அல்லது நல்ல, புரிந்து நடக்கக்கூடிய கணவனைக் கொடுக்குமா? கொடுக்காது. தவறிக் கிடைத்தால் அது பணத்தால் வந்ததாக இருக்காது. ஜாதகப் பலனால் வந்ததாக மட்டுமே இருக்கும்!

இரண்டாம் வீடும், ஏழாம் வீடும், அதன் அதிபதிகளும், காரகர்களும் நன்றாக இருந்தால் மட்டுமே அது கிடைக்கும்!

பணம் நல்ல பிள்ளைகளைக் கொடுக்குமா? நல்ல பெயரை வாங்கிக்கொடுக்ககூடிய, பெற்றோர் சொன்னால் கேட்கக்கூடிய, பெற்றோரை மதித்து நடக்கக்கூடிய பிள்ளைகளைக் கொடுக்குமா? கொடுக்காது. ஒருவனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு அம்சமாக இருந்தால் மட்டுமே அது நடக்கும்.
பணத்தால் மட்டுமே அது நடக்காது.

பணம் கல்வியைக் கொடுக்குமா? ப்ளஸ் டூவில் 98% கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெறும் வாய்ப்பைக் கொடுக்குமா?
பணம் அறிவைக்கொடுக்குமா?
பணம் புத்திசாலித்தனத்தைக் கொடுக்குமா?
பணம் நகைச்சுவை உணர்வை, எப்போதும் கலகலப்பாக இருக்கும் உணர்வைக் கொடுக்குமா?
பணம் நம் மீது பாசத்தோடு, பரிவோடு இருக்கும் உறவினர்களைக்கொடுக்குமா?
பணம் நல்ல தொழிலை, நமக்கு வசப்படும் தொழிலைக் கொடுக்குமா?
பணம் விசுவாசமுள்ள நல்ல வேலைக்காரர்களைக் கொடுக்குமா?
பணம் அடுத்தவரை சரிபண்ணிக்கொண்டு செல்லும் நல்ல குணத்தைக் கொடுக்குமா?
பணம் முழு மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
பணம் எப்போதும் நிம்மதியாக இருக்கும் நிலையைக் கொடுக்குமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்

மேலே குறிபிட்டுள்ள எதையும் பணம் கொடுக்காது!
---------------------------------------------------------------------
இன்றைய பொருள் சார்ந்த உலகில் அநேக மக்கள், பொருள் இருந்தால், அதாவது பணம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

ஆனால் உலக அனுபவம் அதை வேறு விதமாகச் சொல்கிறது. மாற்றிச் சொல்கிறது.

மகான்கள் மற்றும் வாழ்வியல் நிபுணர்கள், பணத்தைத் தேடி ஓடாதே என்று சொல்கிறார்கள். உனது சக்தி, முயற்சி, செயல், மற்றும் நேரம் முழுவதையும் பணத்தைத் தேடுவதில் செலவழிக்காதே என்று சொல்கிறார்கள்.

மற்ற எல்லா செயல்களையும்விட பணத்தேடல், பணத்தைச் சம்பாதிப்பதற்கான அல்லது பணத்தைக் கைப்பற்றுவதற்கான  வழிமுறைகள் உங்களை அதிகமான அதர்மங்களை, பாவங்களைச் செய்யத் தூண்டுகிறது, செய்ய வைக்கிறது என்கிறார்கள்.

உங்களுடைய மென்மையான/மேன்மையான குணங்களையும், நல்ல கொள்கைகளையும் அது அழித்துவிடக்கூடும்.

எத்தனை சொத்துச் சண்டைகள்? குவித்து வைத்த அல்லது இம்மி இம்மியாகச் சேர்த்துவைத்த சொத்துக்களுக்காக எத்தனை விதமான சண்டை சச்சரவுகள். எத்தனை விரோதங்கள்? எத்தனை மனப் போராட்டங்கள்?

அப்பன் மகனுக்குள், அண்ணன் தம்பிகளுக்குள், அல்லது உடன் பிறந்த சகோதரிகளுடன், சுருக்கமாகச் சொன்னால் குடும்பத்திற்குள் எத்தனை சண்டைகள்? எத்தனை சதிகள்? வெட்டு, குத்துக்கள்?

கட்டித்தழுவ வேண்டிய உறவுகள் எல்லாம் வெட்டி வீசப்படும் நிலைமை. கொட்டி கவிழ்க்கப்படும் நிலைமை!

அனுதினமும் செய்திதாள்களில் எத்தனை செய்திகள் வருகின்றன!

வயல் வரப்பை ஒரு அடி அகலப்படுத்தியதற்காக அண்ணனின் கையை வெட்டிய தம்பியை நாம் பார்க்கவில்லையா?

சொத்துத் தகறாரில் அப்பனைப் போட்டுத் தள்ளிய மகனைப் பற்றி நாம் கேள்விப்படவில்லையா?

பணத்திற்காக உயிர் நண்பனுக்குத் துரோகம் செய்யும் ஆசாமிகளை நாம் பார்க்கவில்லையா?

பணத்தால் சந்தோஷம் என்ற குழந்தை மட்டும் உருவாகாது. துன்பம் என்ற தீராத கஷ்டம் என்ற பிணியுள்ள, முடமான குழந்தையும் பிறக்கும். அதை மனதில் வையுங்கள்.

மற்ற செயல்களால், மற்ற விஷயங்களால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பணத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி குறைவானதே என்று ஒரு ஆய்வு சொல்கின்றது.

நமது அத்தியாவசியத் தேவைகளுக்குப் போதுமான அளவில் கிடைக்கின்ற பணமே நமக்குப் போதுமானதாகும். அதுவே நமக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும். அந்த அளவைத் தாண்டிக் கிடைக்கின்ற பணம் மகிழ்ச்சியைக் கொடுக்காது!

ஓரளவு பணம் இருந்தால் அது உன்னைக் காப்பாற்றும். அதிகமான பணம் இருந்தால் அதை நீ காப்பாற்ற வேண்டும்!
அதீதமான பணம் கிடைக்கும்போது, அதைப் பாதுகாப்பது, தகுந்த இடத்தில் அதை முதலீடு செய்வது போன்ற பிரச்சினைகள் தலை தூக்கும்.

சாதாரண மக்கள் தங்கள் தேவைக்கு உரிய பணம் கிடைக்காததால் மகிழ்ச்சியாக இல்லை.

பணம் இருப்பவனும் மகிழ்ச்சியாக இல்லை. இல்லாதவனும் மகிழ்ச்சியாக இல்லை!

மொத்தத்தில் இரண்டுவிதமான மனிதர்கள்தான் உலகில் உள்ளார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் ஒருவகை. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாதவர்கள் இன்னொருவகை!

தர்ம சிந்தனையும், நியாய உணர்வும், இறையுணர்வும்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுதான் நிதர்சனமான உண்மை!

அதைத்தான் நமது வேதங்களும், புராணங்களும் சொல்கின்றன!

அதை உணருங்கள். அது மட்டும் போதும், நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்!
-----------------------------------------
A successful person is one who can lay a firm foundation with the bricks that others throw at him or her. - David Brinkley

பிருஹத் பாரசாரா ஹோரா என்னும் பழமையான ஜோதிட நூல் என்ன சொல்கிறது?

1. பதினொன்றாம் வீடு மிகவும் நன்றாக இருந்தால் நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.(an auspicious 11th house makes a person happy at all times)
2. அதேபோல 11ஆம் வீட்டுடன் 9ஆம் வீடும் நன்றாக இருந்தால் எல்லாமே மகிழ்ச்சியுடையதாக அமையும். மனைவி, மக்கள், வாழ்க்கை என்று எதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாமுமே சூப்பராக இருக்கும். 9ஆம் வீடு என்பது 11ஆம் வீட்டிற்குப் பதினொன்றாம் வீடாகும். அதையும் மனதில் வையுங்கள்!  9th house (11th from 11th house).

இது மேலநிலை வகுப்புப் பாடம் (http://classroom2013.com) அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது
ஆக்கங்களைப் பிரதி எடுத்துக்கொண்டுபோய்த் தவறாகப் பயன்படுத்தவேண்டாம்!

அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களை ,பாடங்கள், கட்டுரைகள் மற்றும் கதைகளை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது! காப்பு உரிமை பெறப்பட்டுள்ளது. அதை மனதில் கொள்க!